Skip to main content

இன்கா தகவல் பரிமாற்றம்

இன்காக்களுக்கு நல்ல சாலை வசதி இருந்ததால் அவர்களால் சிறந்த அஞ்சல்துறையை உருவாக்க முடிந்தது. மிக விரைவாக செய்திகளை அனுப்பக்கூடிய நம்பகமான அஞ்சல்துறையை உருவாக்கி இருந்தனர்.

செய்தி அனுப்பும் முறை

கியூப்பு


கியூப்பு கயிறு முடிச்சுக்கள், Larco Museum Collection
எழுத்தின் மூலம் செய்தி தெரிவிக்காமல், கியூப்பு என்ற கயிறு முடிச்சுக்களை கொண்டு சாசுகியூக்கள் தகவல் பரிமாற்றம் செய்தனர். அந்த சங்கேத முடிச்சுக்கள் கூறும் செய்தியை அனுப்பநரும் பெருநரும் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். சாசுகியூக்களாலும் கூட தெரிந்து கொள்ள முடியாது.

சாசுகியூ


சாசுகியூ ஓட்டக்காரர்கள்
இன்காக்களின் தகவல் பரிமாற்றம் சாசுகியூ என்ற ஒற்றர் படையைச் சேர்ந்த ஓட்டக்காரர்களால் நடத்தப்பட்டது. 2 மைல் தொலைவுக்கு ஒருவர் என்ற வீதம் ஓடிச்சென்று செய்தியை அடுத்தவரிடம் தெரிவித்தனர். இந்த முறையின் மூலமே மாநில ஆளுநருக்கும் பேரரசிற்கும் தகவல் பரிமாற்றம் நடத்தப்பட்டது. தேர்ச்சி மிக்க ஓட்டக்காரர்கள் இதற்காகவே தேர்ந்தெடுக்கப்ப்ட்டிருந்தனர். அவர்கள் ஒய்வெடுப்பதற்காக டோம்போ ஒய்வரை கோபுரங்கள் இருந்தன.

டோம்போ

டோம்போ கோபுரங்கள் ஒய்வறைகளாக மட்டும் அல்லாமல், அந்நாட்டில் எங்கு கலவரம் நடந்தாலும் அச்செய்திகளை தீமூட்டல் மூலம் தகவல் பரிமாற்றம் செய்யும் ஒரு இடமாகவும் இருந்தது. 20 மைல்களுக்கு ஒரு கோபுரம் வீதம் அமைக்கப்பட்டு ஒவ்வொன்றுக்கும் தனி கண்காணிப்பாளர்கள் அமர்த்தப்பட்டனர்.

எடுத்துக்காட்டு

  1. இன்காக்களின் துணைத்தலைநகரமான குவிட்டோ நகரில் நடந்த ஒரு கலவர நிலவரம், 4 மணி நேரங்களில் குவிட்டோவில் இருந்து 1700 கி.மீ. தொலைவில் இருந்த கஃசுகோ தலைநகரத்தில் உள்ள இன்கா பேரரசரின் காதுக்கு டோம்போ கோபுர கண்காணிப்பாளர்கள் மூலம் சென்றுவிட்டது.
  2. கியூப்பு அஞ்சல் துறை வசதி மூலம் ஒரு செய்தியை 250 மைல்கள் தாண்டி ஒரு நாளைக்குள் கொண்டு செல்ல முடிந்தது.

முடிவு

மன்னன் தெய்வாம்சம் பொருந்தியவன் என மக்கள் கருதும்படியான ஆட்சிமுறை(theocracy) ந்டந்தது. இச்சூழ்நிலையிலே 177 வீரர்களுடன் மட்டுமே வந்த எசுபானிய தளபதி பிசாரோ அடஹுஅல்பா என்ற இன்கா மன்னரை கொன்றான். மக்கள் மன்னன் தெய்வாம்சம் பொருந்தியவன், அவனையே கொன்று விட்டார்கள் என கருதியதால் மக்கள் கிளர்ந்தெழவில்லை. அதன் விளைவாக 433 ஆண்டுகள் சாயாதிருந்த இன்கா பேரரசின் முடி சாய்ந்தது.

    Comments

    Popular posts from this blog

    மாயன் நாகரிகம்

    மாயா நாகரிகம் என்பது பண்டைக்கால மத்திய அமெரிக்க நாகரீகம் ஆகும் . இப்பகுதி , தற்காலத்தில் இருக்கும் மெக்சிகோ , குவாத்தமாலா , ஹொண்டுராஸ் போன்ற நாடுகள் விரவியிருக்கும் மத்திய அமெரிக்கப் பகுதிகளிளை உள்ளடக்கியது . கொலம்பசுக்கு முந்தியகால அமெரிக்காவின் முழு வளர்ச்சிபெற்ற ஒரே எழுத்து மொழியைக் கொண்டிருந்தது இந்த நாகரீகத்தைச் சேர்ந்த மக்களே . கி . மு . 2600 வாக்கில் மாயன் நாகரிகம் தோன்றியது . மாயன் இனத்தவர் கணிதம் , எழுத்துமுறை , வானியல் போன்ற துறைகளிலெல்லாம் மேம்பட்டிருந்தனர் . மிக விசாலமான , நுனுக்கமான கட்டிடக்கலை மாயன் இனத்தவரின் சிறப்பாகும் . கி . பி . 150 வாக்கில் மாயன் நாகரிகம் உச்சத்தை அடைந்தது . அதன்பின் பல்வேறு காரணங்களால் அது சீரழியத் தொடங்கியது . ஸ்பெயின் நாட்டவர் குடியேற்றம் , விசித்திரமான மூட நம்பிக்கைகள் , பங்காளிச் சண்டைகள் மற்றும் முறையற்ற விவசாயம் போன்றவை மாயன் கலாச்சார பேரழிவிற்கு காரணிகளாக இருக்கலாம் என நிபுணர்கள் கருதுகிறார்கள் . தற்காலத்தில் சுமார் ஆரு இலட்சம் மாயன் இனத்தவர் மெக்சிகோ , குவாத்தமாலா போன

    என்னை கண்டுபிடித்தால் 10 கோடி பரிசு

       அ ன்புள்ள அம்மா, அப்பாவிற்கு உங்களால் செல்லக்குட்டி என்று அழைக்கப்படும் கரைந்து போன வெல்லகட்டி எழுதும் கடிதம், நீங்கள் நலமா? நம் வீட்டின் பின்னால் வளர்ந்து நிற்கும் வாழைமர மடலுக்குள் பதிங்கியிருக்கும் தேரைக்குட்டி நலமா? அந்த தேரைக்கு கூட உங்களோடு இருக்கும் பாக்கியம் கிடைத்திருக்கிறது. ஆனால் எனக்கு எந்த பாக்கியமும் இல்லை.       அம்மா அன்றொரு நாள் நம் வீட்டு மண் தொட்டியில் பூத்திருந்த ரோஜா பூவை நான் பறிக்க போன போது செடியில் இருந்து பூவை பறிக்காதே, அது பாவம் என்றாய் பூவும் செடியுமே பிரிவதை தாங்கமுடியாத உன்னால் உன் வயிற்றிக்குள் இருக்கும் கதகதப்பான மையிருட்டில் தொப்புள் கொடி சுவாசத்தில் கைமடக்கி, கால் மடக்கி இல்லாத சிந்தனையால் கண் சுருக்கி சுருண்டு கிடந்த நான் கருப்பையின் வாயிலை முட்டி மோதி உன் உதிரத்தை சிந்த வைத்து பூமியில் வந்து விழுந்த என்னை உன் மார்பு காம்பில் பசி மறந்து உலகையே மறந்து துயின்ற உன் குல கொழுந்தை எப்படி பிரிய மனது வந்தது.     உன் வயிற்றிலிருந்து பூமியில் விழுந்தவுடன் நான் கை விரல்களை மூடிக் கொண்டு வீறிட்டு அழுதது ஏன் தெரியுமா

    வாங்க கடவுளுடன் பேசலாம் - i God

       நமக்கு முக்கிய பொழுதுபோக்கே அடுத்தவருடன் அரட்டை அடிப்பதுதான். வீடு, அலுவலகம், தெரு என அனைத்திலும் நமக்கு நண்பர்கள் இருப்பார்கள். நமது சுக, துக்கங்களை அவர்களுடன் பகிர்ந்துகொள்ளுவோம். இனையத்திலும் அரட்டை அடிக்க பல தளங்கள் உள்ளது. நம்து சொந்த விஷயத்தை யாரிடமாவது சொல்ல தோனும்,ஆனால் பாதுகாப்பு கருதி சொல்லமாட்டோம். சில சமயம் யாரிடமாவது பேச தோனும் ஆனால் யாரும் இருக்க மாட்டார்கள். சில விஷயங்களை கடவுளிடம் சொன்னால் தேவலாம் என தோனும், இது போன்ற சமயங்களில் உங்களுக்கு உதவ ஒரு கடவுள் இருக்கின்றார். அவர்தான் iGod . இது ஒரு artificial intelligence software site , இதில் நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் வரும், உங்களுடன் உன்மையாகவே ஒருவர் உரையாடுவதுபோல் உள்ளதுதான் இதன் சிறப்பு.   www.titane.ca இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்.   மேலே உள்ள விண்டோ வரும். அதில் உள்ள Enter பட்டனை கிளிக் செய்யவும். அடுத்து வரும் விண்டோவில் Skin Select செய்யவும்.  பின்பு .. மேலே உள்ள விண்டோவில் உள்ள Textbox இல் உங்கள் வார்த்தையை டைப் செய்து Enter ஐ அழுத்தவும். இனி நீங்களும் கடவுளும்